ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்த விடயம்!
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (GotabayaRajapaksa) இன்று தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பானது இன்று மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்தில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயம்,
இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையை தொடர்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்த நிலையில் அதனை ஆராய்வதற்காவே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போதே பயங்கரவாத தடைசட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள ஒரு சில சரத்துக்களில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக பிரதிநிதிகள் குழுவினரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபத கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya rajaPaksa) தெரிவித்துள்ளார். இருப்பினும் இவ்விடயத்தில் காலத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வு ஒன்று அவசியம் என ஜனாதிபதி கோட்டாபயவிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் நீர்த்தாரை பிரயோகம், தடியடித் தாக்குதல் அல்லது கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்த விஜயத்தின் போது அவதானித்த விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கையொன்றை இந்த குழுவினர் சமர்ப்பிக்கவுள்ளனர்.