குழப்பம் விளைவித்த தமிழ் ஆசியருக்கு நேர்ந்த நிலை!
வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் அதிகாரிகளுடன் முரண்பட்டு குழப்பம் விளைவித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் அது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவனின் பெற்றோரான ஆசிரியர் ஒருவர் தனது மகனின் வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன், புகைப்படம் எடுத்ததாக கு அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குறித்த ஆசிரியர் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் விளக்கம் அளிப்பதற்காக சென்றுள்ளார்.
இதன்போது அவர் அங்கு இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முரண்பட்டு வாய் தர்க்கம் புரிந்துள்ளதுடன், அதிகாரிகளுடன் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தொடர்பில் 119 பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு பொலிசார் சென்றதும் ஆசிரியர் அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியருக்கு எதிராக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆசிரியரே வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபருடன் முரண்பட்டு இடமாற்றம் பெற்று சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.