வெலிசர விபத்து; மாணவனும் உயிரிழப்பு
கடந்த 4ஆம் திகதி வெலிசர மஹபாகே மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் படுகாயமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரியில் வசித்து வந்த 17 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெலிசர பிரதேசத்தில் 16 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற சொகுசுக் காரொன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை மாணவனின் மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவர் முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.