தங்கப்பதக்கம் வென்ற தமிழ் மங்கைக்கு அமோக வரவேற்பு!
குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இடம்பெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று நாட்டிற்கும் தான் பிறந்த முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த போட்டியில் கணேஷ் இந்துகாதேவியுடன் இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டு சம்பியனாக இலங்கை மகுடம் சூடியது.
குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 48-52 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.
அவருடன், கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்நிலையில் நாடு திரும்பிய இந்துகாதேவிக்கு வுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் குத்துச்சண்டையில் சாதித்துள்ள தமிழ் மங்கை இந்துகாதேவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகுடம் சூடிய இலங்கை!