சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகுடம் சூடிய இலங்கை!
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 48-52 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.
அவருடன், கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
தொடர்புடைய செய்தி
பாகிஸ்தானில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி! பலரும் பாராட்டு