புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு தொடர்பில் நாமல் கவலை
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் வெளிநாட்டில் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம் நடாத்தியிருந்தனர்.
அதோடு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகம் அவர்களை நடாத்திய விதம் கவலையளிப்பதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் எந்த ஒரு கூட்டத்தையும் தமிழர்கள் நடத்த விட வில்லை என்பது மேலும் கவலை தரும் விடையம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.