வெளிநாடுகளிலுள்ள பாதாள உலக குழுக்களுக்கு எச்சரிக்கை
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
பாதாள உலக உறுப்பினர்கள்
இவ்வாறு பாதாள உலக உறுப்பினர்களுக்கு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பொலிஸாருக்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ள நிலையில் சமீபத்திய நாட்களில் வெளிநாட்டில் இருந்த 19 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குற்றவாளிகள் மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவடையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.