உணவுப் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுள்ளது.
இந்த விடயத்தினைத் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனதெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறான உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை, பொதுமக்கள் கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.