இலங்கையில் தரமற்ற சவர்க்காரங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
குழந்தைகளுக்கு தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துவதால் அவர்களின் தோலில் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக அரசாங்க குடும்ப நலச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிராமப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக அரசாங்க குடும்ப நலச் சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வீட்டுக் கைத்தொழில்கள் ஊடாக பல்வேறு தரப்பினர் சவர்க்கார தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இவ்வாறு தயாரிக்கப்படும் சவர்க்காரங்களின் தரம் தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான சவர்க்காரங்களைத் தவிர்த்து குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும், தரமான சவர்க்காரங்களைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.