வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வந்த எச்சரிக்கை!
நாட்டில் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண மக்கள் போன்று குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுட்டுள்ளது.