இலங்கை வரும் பிரிட்டன் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பிரிட்டன் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே பிரிட்டன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள்
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பில்,
கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
விமான நிலையம் வழியாக கொண்டு செல்லும்போது உட்பட சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்தால் பயன்படுத்தினால் அல்லது கடத்தினால் நீண்ட சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் சட்டவிரோத பொருட்களைக் கண்டறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன என தெரிவித்துள்ளது. இலங்கையில் போதைப்பொருள் குற்றங்கள் பயங்கரவாதம் மற்றும் பிற அனைத்து கடுமையான குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகள் இருப்பதாகபிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் உங்களை காலவரையின்றி குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீங்கள் நீண்ட சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும்" என்று பயண ஆலோசனை எச்சரித்தது.
தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ தாய்லாந்திலிருந்து விமானத்தில் வந்தபோது அவரது சூட்கேஸ்களில் 46 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து மே மாதம் இலங்கையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.