வாக்களித்தவர்கள் வீதியில் : கண்ண மூடி கொண்டு வரிக்கு ஆதரவு
இன்று நாடாளுமன்றத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி உயர்த்துவது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது மரணம் அடைபவர்களிடமும் வரி பணம் அறவிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இன்று நாடாளுமன்றத்தில் புதிதாக இணைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்துள்ளதோடு இதன் போது பால்மா, சீனி, பருப்பு போன்ற இன்னும் சில ஏனைய பொருட்களுக்கான வரி உயர்த்துவது தொடர்பான வாக்கெடுப்பு இடம் பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமைக்கு மத்தியிலும் வாழ்வாதாரத்தை இழந்து கடந்த 88 நாட்களாக தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக கால்நடை பண்ணையாளர்கள் தங்களது அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய சுகபோக வாழ்க்கைக்கு மக்களின் நலனை கூட கருத்தில் கொள்ளாமல் கண்ணை மூடி இந்த வரிச் சுமைக்கு ஆதரவாக வாக்களித்தமை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.