IMF இற்கு எதிராக வாக்களிக்கும்; பிரபல கட்சி!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளுக்கு எதிராக தேசிய மக்கள் கட்சி நிச்சயமாக வாக்களிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி கடனை செலுத்துவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தீர்மானம் எடுப்பதாகவும், அந்த தீர்மானத்திற்கும் நிதி நிதியத்தின் செயற்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில் நிதிய முன்மொழிவு தொடர்பில் ஜனாதிபதி வெறித்தனமான போக்கை காட்டி வருவதாகவும், சொத்துக்களை சுவீகரிப்பதாக கூறி பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்க வரிகள் காரணமாக பல தொழில் நிபுணரின் சம்பளம் எதிர்மறையாக சென்றுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.