இலங்கை ஆயுதப் படைகளின் மதிப்புமிக்க பதக்கத்தை பெற்றுக்கொண்ட சவேந்திர சில்வா
இலங்கை ஆயுதப்படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா விருது வழங்கப்பட்டுள்ளது.
மதிப்புமிக்க 20 பதக்கங்களை வென்ற சவேந்திர சில்வா
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தையும் ,விஷிஷ்ட சேவா விபூஷணயா சிறப்பு விருது மற்றும் பதக்கம் போன்ற வெவ்வேறு மதிப்புமிக்க 20 பதக்கங்களை வென்றுள்ளார்.
கேர்னல். மற்றும் அதற்கு மேல் இராணுவத்தில் உள்ளவர்கள் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படையில் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.