விஜய் இன்று பதவி ஏற்கவில்லை எனில்.....; பிஸ்மி சொன்ன ஜோசியம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பானையினை பெற்று தவெக தலைவர் விஜய் அமோக வெற்றியை பெற்றிருந்தாலும் கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில், நேரு விளையாட்டரங்க்கில் பதவி ஏற்புக்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதற்காக ஆளுநரை நேற்றியதினம் விஜய் சந்தித்து கடிதம் கையளித்த நிலையில் , ஆளுநரால் இன்னமும் பதவியேற்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில், தற்போது விஜய் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இன்று பதவியேற்காவிட்டால் 13 ஆம் திகதிதான்
அதேவேளை திமுக தலைவர் முக ஸ்டாலினும் விஜய் பதவியேற்க தாம் தடையாக இல்லை என கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஜய் பதவியேற்பு குறித்து கருத்து தெரிவிக்கையில்,
ஆளுநர் பெருபான்மையை நிரூபித்தால் தான் பதவியேற்க அனுமதிப்பதாக கூ றுவது அரசியல் முரண்பாடு என கூர்இயுள்ளதுடன், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உடனடியாக அனுமத்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சினிமா செய்தியாளர் மற்றும் அரசியல் விமர்சகர் பிஸ்மி தனது எக்ஸ் தளத்தில் ‘ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலையும் கொடுத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார்.
எனவே, மே 7ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை. ஆளுநர் கேட்ட பட்டியலை தவெக கொடுத்தால் மே 8ம் தேதி பதவியேற்க வாய்ப்புண்டு. அரசியலில் 8 ராசியில்லாத எண் என நினைத்தால் அன்றும் பதவி ஏற்பு நடக்காது.
மே 9ம் தேதி அஷ்டமி என்பதால் பதவி ஏற்பு நடக்காது. மே 10ம் தேதி அஷ்டமி என்பதாலும் பதவி ஏற்பு விழா நடக்காது. மே 11 மீண்டும் நவமி.. மே 12ம் தேதி செவ்வாய்கிழமை.. எனவே பதவியேற்பு நடக்காது .அடுத்த வாய்ப்பு மே 13ம் தேதி புதன்கிழமைதான். அன்றைக்கு முகூர்த்த நாள் என்பது கூடுதல் தகவல்’ என பதவிட்டிருக்கிறார்.