சமூக ஊடங்களில் தீயாக பரவும் கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் காணொளி!
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி ஏற்பட்ட படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உய்ரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் சம்பவம் இடம்பெறுவதற்கு இரு தினங்களுக்கு முன் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளனர். குறித்த காணொளி தற்போது சமூக ஊடங்களில் தீயாக பரவி வருகின்றது.
மேலும் இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர மேயர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மேயர் நேற்று (25) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் 3 நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.