நான்கு வயது சிறுவனை தாக்கி வெளிநாட்டில் உள்ள தாய்க்கு காணொளி!
தனது 4 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊவா- பரணகம பகுதியில் அமைந்துள்ள கம்பஹா தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தாய்
இந் நிலையில், மனைவி தனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் தான், மகனை தாக்கும் காட்சியை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த தாயார், காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா தோட்டம், மேல் பிரிவு – உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதோடு தாக்கப்பட்டதாக கூறப்படும் 4 வயது சிறுவனும் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்