ஈவிரக்கமின்றி புறாக்களை திருடி தின்று காணொளி வெளியீடு!
அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று உண்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிக் டொக் வீடியோ
புறாவை சாப்பிட்டதை டிக் டொக் வீடியோவாக உருவாக்கி, புறாக்களின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அது தொடர்பில் அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் வீடொன்றில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து புறா களவாடப்பட்டிருந்தது.
மேலும் கைதான சந்தேகநபர்கள் மூவரும் நாளை (30) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.