வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்யுங்கள்; மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிலைத்திருப்பாள்!
பொதுவாக மகாலட்சுமி வாசனை நிறைந்த இடங்களில் வசிப்பவள். அவ்வாறு மகாலட்சுமி பிடித்த வாசனை மிகுந்த பொருட்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வெட்டிவேர்.
வெற்றிகளைத் தரும் வெட்டிவேர் என்றே இதனை அனைவரும் கூறுவர். வெட்டிவேரை நாம் பல வகைகளில் பூஜைகளுக்கு பயன்படுத்தலாம்.
வெள்ளிக்கிழமையில் செய்யவேண்டியது
வெள்ளிக்கிழமையில் நம் பூஜை அறையில் ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய நீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சம் கனியை போட்டு, இந்த வெட்டி வேறையும் அதில் போட வேண்டும்.
இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதேபோல் எலுமிச்சை கனியையும் வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். வெட்டிவேரை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
இவ்வாறு நாம் செய்து வர வெட்டிவேரின் வாசமானது நம் பூஜை அறையில் நிரந்தரமாக இருக்கும். அதனால் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு மகாலட்சுமி அனுக்கிரகத்தால் செல்வசேர்க்கை உண்டாகும்.
காரிய தடை நீங்க
காரிய தடை நீங்க வெட்டிவேர் பொடி அடுத்ததாக, வெட்டிவேரை வெயிலில் காயவைத்து அதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து அதை நாம் தினமும் பூசும் திருநீற்றில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த காரியத்திற்கு நாம் சென்றாலும் இந்த வெட்டிவேர் கலந்த திருநீற்றை நம் நெற்றியில் அணிந்து செல்வதால், நமக்கு காரிய தடைகள் ஏதும் இன்றி வெற்றிகரமாக செயல்கள் நடைபெறும்.
வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க
மகிழ்ச்சி அதிகரிக்க வெட்டிவேர் அடுத்ததாக, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வெட்டிவேர் பொடியை சேர்த்து, அதனுடன் 5 வேப்பிலை இணுக்குகளை சேர்த்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
மறுநாள் இந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி, நேர்மறை ஆற்றல்கள் ஏற்படும்.
இதன் மூலம் வீட்டில் அதுவரை இருந்த துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகாலட்சுமி வீட்டில் நிலைக்க
மகாலட்சுமி நம் வீட்டின் நிலை வாசல் வழியாகத்தான் வீட்டிற்குள் வருவாள். மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவைக்க, நம் வீட்டு நிலை வாசலில் வெட்டிவேரை தோரணமாக கட்டி தொங்க விடலாம்.
இவ்வாறு செய்வதால் நிலைவாசல் என்றும் மணத்துடன் இருக்கும். ஆதலால் மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவாள்.