தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (13-03-2024) மாலை புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவில் இருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.4
குறித்த விபத்தின் போது வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.