வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!
Sri Lanka Police
Vavuniya
Accident
By Shankar
வவுனியாவில் வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக இன்றைய தினம் (30-12-2022) வவுனியா பொலிஸாரினால் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விபத்துக்களை குறைக்கும் முகமாக கனரக வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் துவிச்சக்கரவண்டி போன்றவற்றிற்கு மின்னொளி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே அவர்களின் திட்டமிடலில் சீன அரச கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த செயற்பாட்டின் போது வீதியால் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், சீன அரச கூட்டுத்தாபனத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US