வவுனியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 23 வயது இளைஞன்!
வவுனியா பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (30-07-2023) அதிகாலை ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.