வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரை கண்ட அயலவர்கள்!
வவுனியாவில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று (20-12-2021) மாலை வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் கதவு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்த வவுனியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.