வத்தளை துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் வெளியிட்ட சந்தேகம்
கொழும்பு - வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் டெங்கு ஒழிப்பு அதிகாரியின் வீட்டிற்கு இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச்சூடு அவரது சகோதரரின் மகனாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வெலிசறை மாபாகே பகுதியில் வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் டெங்கு ஒழிப்பு அதிகாரியை இலக்கு வைத்து, நேற்று ( 28 ) மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த முற்பட்டிருந்தனர்.
தப்பிச்சென்ற சந்தேகநபர்கள்
இதன்போது, துப்பாக்கிதாரியின் கையில் இருந்த துப்பாக்கி இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிகாரி அருகில் இருந்தோரை பாதுகாப்பிற்காக வரவழைக்க முற்பட்ட போது, சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் , குறித்த டெங்கு ஒழிப்பு அதிகாரியின் சகோதரரின் மகனை இலக்கு வைப்பதற்காக அவர்கள் பிரவேசித்திருக்கக்கூடும் என விசாரணைகளின் போது, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் , ஒப்பந்த அடிப்படையில் சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் மேலதிக விசரணைகளையும் முன்னெஉத்து வருகின்றனர்.