நீர்கொழும்பு சிறைச்சாலை நிலைமை தொடர்பில் வெளியான தகவல் ; பெண் கைதிகள் போராட்டம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர்.
அவ்விடத்தைப் பாதுகாக்க ஏராளமான காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், பெண் கைதிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் மோதல்
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.