சீரற்ற காலநிலை ; கொழும்பு மாவட்டத்தில் 1,321 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் 239 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மழையுடன் பலத்த காற்று
அனர்த்தத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று வி (29) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது.
நாட்டில், மழை மற்றும் காற்று நிலைமைகளால் 9 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.