தமிழர் பகுதியில் பல்கலைக்கழக மாணவியை இரவுவேளை இழுத்து சென்ற பொலிஸார்! பரபரப்பு காட்சிகள்
திருகோணமலை - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் நேற்றிரவு சம்பூர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நால்வரையும் இன்றையதினம் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது, 40 வயதான சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா 22 வயதான பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா, 40 வயதான சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி, 43 வயதான பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிஸாரினால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது.
நீதிமன்ற தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்த குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.