பிரித்தானியாவில் லொட்டரியில் விழுந்த 300 கோடி: கணவன் - மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்
பிரித்தானியாவில் தம்பதியினர் ஒருவருக்கு லொட்டரி குலுக்கலில் 300 கோடி விழுந்துள்ள நிலையில் குறித்த தம்பதியினர் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் தம்பதி 50 வயதுடைய ஷரோன் மற்றும் 55 வயதுடைய நைஜல் தம்பதியனராக இருந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு National Lottery draw(தேசிய லொட்டரி குலுக்கல்)-ல் 12 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் 3,26,04,94,849 கோடி ருபாய்) பரிசாக விழுந்துள்ளது.
தொடங்கத்தில் பணத்தை ரகசியமாக வைத்திருந்த இவர்கள், அதன் பின் இந்த பணத்தில் சிறு பகுதியை தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்து உதவி செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதன் பின்னரே லொட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற செய்தி வெளியாகிறது. தற்போது இவர்கள் தங்களுக்கு கிடைத்த லொட்டரி பரிசு மூலம், 30 குடும்பங்களுக்கு காசோலை மூலம் கொடுத்து உதவியுள்ளனர்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 55 வயதுடைய நைஜல் ஹோட்டல் மேலாளராக வேலை செய்து வருகிறார். அப்போது தான் இவர்களுக்கு இந்த மிகப் பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
மேலும் குறித்த அதிர்ஷ்டம் விழுந்த நேரத்தில் Sharon -னுக்கு இரண்டாவது குழந்தையை பிறந்துள்ளது. ஆனால், நாம் வைத்திருக்கும் இந்த தொகை ஒரு குடும்பம் அனுபவிக்க முடியாத அளவிற்கு பெரிய தொகை, மிகப் பெரும் அதிர்ஷ்டம் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இதனால் அவர்கள் இந்த பணத்தை வைத்து நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கியவர்கள் போன்ற 30 பேருக்கு காசோலை மூலம் பணம் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் Sharon தெரிவித்தது, இதை நாங்கள் பெருமைக்காக செய்வது அல்ல, எங்களுடைய நெருக்கமானவர்களுக்கு செய்யும் உதவியாக நினைக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கு சென்று காசோலைகளை வழங்கினோம்.

பின்னர் ஒரு சின்னர் கார்டி சில வார்த்தைகளை எழுதி, அதன் பின் செக்கில்(காசோலை) குறிப்பிட்ட தொகைகள் போட்டு கொடுத்தோம் என்று கூறினார். Nigel தற்போது உள்ளூரில் இருக்கும் தொண்டு நிறுவனமான Stockdales-ன் தலைவராக உள்ளார்.
குறித்த தம்பதிக்கு தற்போது 15 வயதில் Reece மற்றும் 12 வயதில் Lewis என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியானவுடன் இதைக் கண்ட இணையவாசிகள் இவர்களின் இந்த மனதைக் கண்டு பாராட்டி வருகின்றனர்.