பிரபல உணவகங்களில் கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத உணவுகள்
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனித பாவனைக்கு உதவாத சமைத்த மற்றும் உலர்த்திய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்த ஹோட்டல்கள், உணவு விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன.
காத்தான்குடி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம்.பஷீர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ,நகர சபை ஊழியர்கள்,
இணைந்து நடத்திய சோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் நோய் தொற்றை உண்டாக்க கூடியவாறு உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த உணவக உரிமையாளர்களிடம் இருந்து பெரும்தொகையான உணவுகள் கைப்பற்றப்பட்டது
மேலும், 3 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.