பாடசாலையில் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்களுக்கான அறிவிப்பு
பாடசாலைகளில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளின் ஊடாக தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்துக்கு அமைய 16 முதல் 19 வயதுக் குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை களின் ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.
பாடசாலைகளில் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள், வார இறுதி நாட்களில் வைத்தியசாலை களுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதோடு பாதுகாப்பான முறையில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.