யாழ். மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் முக்கியஸ்த்தர்கள் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் உலக உணவு திட்டத்திற்கான இலங்கைக்கான குடியுரிமைப் பிரதிநிதி அப்துர் ராஹிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் புரிந்து சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பில் உலக உணவுத்திட்டதால் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்படுங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, போசாக்கு குறைபாடு, பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத்திட்டம் மற்றும் ஜீவனோபாயத்திட்டங்கள் என்பவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கப்பட்டது.