உக்ரைன் - ரஷ்ய போர் விவகாரம்; இந்தியாவை சீண்டும் அமெரிக்க அதிபர்!
உக்ரைன் மீது ரஷியா இன்று 27 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இரு நாட்டு போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா இதுவரை ரஷியாவுக்கு எதிரான எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
அதேசமயம் ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பதுடன், இந்த விவகாரத்தில் ரஷியா மீது மென்மையான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe biden) இன்று தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
இதன்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினை தனிமைப்படுத்துவதில் குவாட் அமைப்பில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் (அமெரிக்கா - இந்தியா - ஜப்பான் - ஆஸ்திரேலியா) செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பதிலளித்த ஜோ பைடன் (Joe biden),
ரஷிய அதிபர் புதினின் ஆக்ரோஷித்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுப்பதில் குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகவும் உறுதியாக உள்ளன.
எனினும் , ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிப்பது, ரஷிய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறதாக கூறியுள்ளார்.