உக்ரைனில் இருக்கும் 40 இலங்கையர்களை மீட்க்கும் நடவடிக்கை தீவிரம்!
உக்ரைனில் இருக்கும் இரு மாணவர்கள் உட்பட, சுமார் 40 இலங்கையர்களை, உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில், தற்போது ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு, வோர்சோ மற்றும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகங்களால் வசதி அளிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், அங்காராவிலுள்ள தூதரகம், உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளதாக, அறிக்கை ஒன்றின் மூலம் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், வெளியேற்றும் செயன்முறையை, திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது.
உக்ரைனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன், அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள், தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், இலங்கைக்கு மீளத்திரும்புவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெலாரஸில் உள்ள 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1 600 இலங்கைப் பிரஜைகளுடன், மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு, பிராந்தியத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.