உக்ரைனில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாக்க அதி விசேட நடவடிக்கை!
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருவதை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 00 90 534 456 94 98 அல்லது 00 90 312 427 10 32 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தூதரகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் முடியுமென அமைச்சு கூறியுள்ளது.
உக்ரைனில் பதற்ற நிலைமை மேலும் அதிகரித்து வருவதால், அங்கு வாழும் இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்காராவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.