ரயிலில் ஏற விடாமல் உக்ரைன் மக்கள் எங்களை துன்புறுத்தினர்! மாணவி வெளியிட்ட பகீர் தகவல்
உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவியை உக்ரைன் மக்கள் ரயிலில் ஏறவிடாமல் துன்புறுத்தியதாக அவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியின் விஷ்ணுபுரம் ஊரைச் சேர்ந்த மாணவி அபிராமி என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[
]
இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் உக்ரைனில் படித்து வருகிறார். ரஷ்ய எல்லைப்பகுதியான கார்கிவ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து கஷ்டப்பட்டு ரயில் நிலையம் வந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் உக்ரைன் நாட்டினர்களால் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்துள்ளனர்.

கார்கிவ் பகுதியிலிருந்து தப்பித்து ரோமானியா எல்லை வருவதற்குள் மாணவி பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளார். உக்ரைனியே மக்கள் இந்தியர்களை ரயிலில் ஏறவிடாமல் பெப்பர் ஸ்பிரே அடித்ததாகவும், இந்தியர்கள் புகைப்படம், காணொளி எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும், மிகவும் கடினப்பட்டு ரோமானிய எல்லை சென்று அதன் பிறகு டெல்லி வந்து டெல்லியில் இருந்து சென்னை வந்து சென்னையில் இருந்து திருவாரூர் வந்ததாக மாணவி அபிராமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரோமானிய நாட்டினர் அவர்களுக்கு உதவியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தனக்கு உதவிய மத்திய மாநில அரசுகளுக்கும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.