புதிய வகை ஆபத்தான கொரோனா! விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா மாறுபாடு என அழைப்படும் ஒமிக்ரான், பேரழிவை ஏற்படுத்தாது என பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று பிரித்தானிய விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
புதிய வகை கொரோனா மாறுபாடு பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசியால் கிடைக்கபெறும் நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். ஜலதோஷம், தலைவலி ஏற்படலாம்.
இதற்காக வைத்தியசாலைக்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது உயிரிழப்பதற்கான வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.