கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை அதிரடி கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்றையதினம் (08-06-2024) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைததன சந்தேகநபர் 31 வயதான உகண்டா பிரஜை எனவும், அவர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.