பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இரு இளைஞர்கள் ; தீவிரமாகும் விசாரணை
கணேமுல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் தாக்கி 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசேட விசாரணையைத் தொடர்ந்து, இந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
தங்க ஆபரணங்கள் திருட்டு
கைதானவர்கள் 17 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, திருடப்பட்ட தங்க ஆபரணங்களை உருக்கி தயாரிக்கப்பட்ட 121 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 17 கிராம்15 மில்லிகிராம் எடையுள்ள இரண்டு தங்கத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.