வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு இளைஞர்கள்; பொலிஸார் தீவிர விசாரணை
பசறை தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் இரண்டு உடல்கள் நேற்று (31) கண்டெடுக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசறை தஹா கனாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு உடல்கள் இருப்பதாக அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது இரண்டு உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
பொலிஸார் தீவிர விசாரணை
28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஒரே வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ல நிலையில் பொலிஸார் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.