நீராடச் சென்ற இரண்டு மாணவர்களுக்கு நேர்ந்த சோக சம்பவம்!
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Shankar
நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட வாவியில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் யஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் விஷ்வா (வயது 17) மற்றும் மொஹமட் அர்பாத் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (20-07-2022) பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் தேடுதல் நடத்தி அவர்களின் சடலங்களை மீட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US