கைது செய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவருக்கு பிணை
இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனடி உணவுச் சந்தையில் புதிய அத்தியாயம் ; வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
2019 ஆம் ஆண்டில் ஆளுநரின் அனுமதியின்றி மீண்டும் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, காலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கைப்பிடிகளற்ற 408 பிளாஸ்டிக் நாற்காலிகளைப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

தென் மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர் (நிதி) மற்றும் முன்னாள் பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.