ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
இந்தியாவில் ஒரே ஓடு பாதையில் இரு விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பை மேற்கொண்டதால் பயணிகளிடையே பெரும் பதற்ற நிலை ஏற்படுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று (08-06-2024) நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் அதேசமயம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானமும் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை எனவும், இந்த காணொளி வைரலால் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.