பெண் ஒருவருக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட செயல்
இங்கிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாக பெண்ணிடம் 2.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மின்சார சபையில் பணிபுரியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரர் என ஹொரண சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் முறைப்பாடு
கொழும்பைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் மற்றும் அவரது 36 வயதுடைய சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் முறைப்பாடு செய்த பெண்ணின் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் உள்ள தனது சகோதரி மூலம் வேலை வழங்குவதாக கூறி இரண்டு சந்தேக நபர்களும் 2025 ஆம் ஆண்டு குறித்த பெண்ணிடமிருந்து பணத்தை பெற்று தங்கள் வங்கிக் கணக்குகளில் 2.3 மில்லியனை வைப்பு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பின்னர்பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த இருவரையும் மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை தலைமை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.