யாழில் காணாமல் போன இருவர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
யாழ். அனலைதீவில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று மாயமான இருவருவரும் தமிழகத்தில் கரை சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் (10-06-2024) மாலை 5 மணிக்கு நண்டு வலைக்குப் புறப்பட்ட இருவர் கரை திரும்பவில்லை என அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோவால் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தில் 35 மற்றும் 44 வயதுடைய இரண்டு மீனவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்த நிலையில் இன்று (12-06-2024) மாலை நாகைபட்டினத்தில் அவர்கள் கரையை வந்தடைந்துள்ளனர்.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகு அலையில் அடித்துச் செல்லப்பட்டே நாகைபட்டினம் கடற்கரையை அவர்கள் அடைந்துள்ளனர் என்று தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.