யாழ்ப்பாணத்தை அடுத்து கிளிநொச்சியில் பரவும் கொடிய நோய்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!
Jaffna
Kilinochchi
Death
By Shankar
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் கடந்த 2 வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06-01-2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி - முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காய்ச்சல், தசைநோவு, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சினைகள் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் வலியுறுத்தியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US