எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு
குருநாகலில் இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீராடும்போது சுகவீனமடைந்த இருவர்
38 மற்றும் 39 வயதுடைய நபர்களே அப்பகுதியிலுள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் காய்ச்சலினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குறைந்த நீருடன் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.