சஹ்ரானுக்கு உதவிய மேலும் இருவர் கைது
சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகரியாவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய உப தபால் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் 35 வயதுடைய மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைதான சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.