இலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுக்கொலை! மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பொலிஸார்
இலங்கையில், கல்கந்த, நீர்கொழும்பு, மஹகும்புக்கடவல, செம்புகுளி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்கள் இன்றையதினம் (10-02-2024) இடம்பெற்றுள்ளது.
முதலாவது சம்பவத்தில் நீர்கொழும்பு கல்கந்தவில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டாவது சம்பவம் மஹகும்புக்கடவல செம்புகுளியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் பற்றிய தகவல்கள், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் துப்பாக்கிச் சூட்டைச் நடத்தியவர்கள் தொடரில் இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.
இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.