ஆண்களை விரும்பாத இரு பெண் மருத்துவர்கள்; எடுத்த முடிவால் பெரும் அதிர்ச்சி!
ஆண்களை திருமணம் செய்து கொள்வதை விரும்பாத இரு பெண் டாக்டர்கள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளதுடன் ,விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படும் சம்பெவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் மஹாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது. மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பெண்கள் 25 வயதான பரோமிதா முகர்ஜி மற்றும் 26 வயதான சுரபி மித்ரா. மருத்துவர்களான இவர்கள் இருவரும் அங்கு சொந்தமாக க்ளினிக் நடத்தி வருகின்றனர் .
இந்த இரு மருத்துவர்களுக்கும் ஆண்களை பிடிக்கவில்லை . அதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தனர் . இதனையடுத்து அவர்கள் இருவருமே தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இது பற்றி தங்களின் பெற்றோரின் சம்மதம் வேண்டி பேசினர் .
அப்போது முகர்ஜி ,ஒரு பெண்ணான தான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியதும் அதை கேட்ட அந்த தாய் அதிர்ச்சியில் மயங்கிய நிலையில் பின்னர் அந்த பெண் தன் தந்தையிடம் இது பற்றி கூறி சம்மதம் வாங்கியுள்ளார்.
அதேவேளை இது குறித்து சுரபி இது பற்றி தன் பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இவர்களின் ஓரின திருமணத்திற்கு சம்மதம் கூறி விட்டனர் .
அதன் பின்னர் அந்த இரு பெண் மருத்துவர்களும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதுடன் ,விரைவில் கோவாவில் திருமணம் செய்யவுள்ளனராம்.