நாகலோகத்திலிருந்து வந்த இருவர் சரணாலயத்தில் கைது ; மீட்கப்பட்ட விசித்திர பொருட்கள்
நாகலோகத்திலிருந்து வந்ததாக கூறி ரித்திகலை சரணாலயத்தின் கொட்டிகல கந்த பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து சிக்கித் தவித்த இருவரை ரிதிகலை வனவிலங்கு சரணாலய அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனுராதபுரம், ராஜாங்கனை மற்றும் மாத்தளை, லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
நாகலோக முனிவர்
காட்டுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடை என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவரும் சட்டவிரோதமான முறையில் காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்
வனவிலங்கு அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் நாகலோகத்திலிருந்து வந்த ஒரு முனிவர் என்றும், தியானத்திற்காக ரிதிகலாவுக்கு வந்ததாகவும் கூறினார். மற்ற நபர் தன்னைச் சார்ந்தவர் என்று கூறியுள்ளார்.
சந்தேக நபர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து லைட்டர்கள், ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ கேமரா, பல ஆடைகள், ஒரு கொக்கி, எலும்புகளால் ஆன மாலை உள்ளிட்ட பல பொருட்களை வனவிலங்கு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கஹட்டகஸ்திகிலிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.